ஆர்சிபி அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தது கர்நாடக கிரிக்கெட் சங்கம் என்றும், அவர்கள் அழைத்ததால் நிகழ்ச்சிக்கு சென்றதாகவும், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் தன்னை சந்தித்து, பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்ததாக கூறினார்.