இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தை தடுக்க, அவர்களின் சம்பளத்தில் பிசிசிஐ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மும்பையில் நடந்த கூட்டத்தில், இனி வரும் காலங்களில் வீரர்களின் பங்களிப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.