அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, C மற்றும் D பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.