Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 12:31 PM
By: Manigandan Raja

கிராம மக்கள் தாக்குதல் :
கர்நாடகாவில் pre-wedding போட்டோஷூட்டின் போது, காலணிகளை அகற்றாமல் கோவிலுக்குள் படம்பிடித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களை உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
மரகுண்டா பைரவேஷ்வரர் கோவிலுக்குள், ஷூ காலுடன் சென்றதால் தாக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது கேமரா உள்ளிட்ட உபகரணங்களும் சேதமடைந்தன.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகாரளித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாததால் 100க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் சக்லேஷ்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved