மத்தியப் பிரதேசத்தின் மந்த்சௌர் மாவட்டத்தில் பைக் மீது மோதிய வேன் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். வேனில் பொருத்தப்பட்டிருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்ததே உயிரிழப்பிற்கு காரணம் என தெரியவந்துள்ளது. கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்றிய உள்ளூர் வாசியும் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆவார்.