Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 01:42 PM
By: Manigandan Raja

ரேபிஸ் நோயால் உயிரிழந்த பரிதாபம் :
மகராஷ்டிர மாநிலம் பால்கரில் தெரு நாய் கடித்தற்கு தடுப்பூசி செலுத்தாமல் இருந்த 9 வயது சிறுமி, 6 மாதங்களுக்கு பிறகு ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாலசோபாரா பகுதியை சேர்ந்த 9 வயதான காசிஷ் சஹானி என்ற சிறுமி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் நடைபயிற்சி சென்றபோது.
தெரு நாய் ஒன்று சிறுமியின் உடலில் தனது நகங்களால் கீறியுள்ளது. உடனே அவரது பெற்றோர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், சிறுமி ஊசிக்கு பயந்து தடுப்பூசியை செலுத்தாமல் வந்துள்ளார். பெற்றோரும் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக விட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved