திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். சுமார் 8 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவில், அரசு-தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள துறைமுகத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னிலையில் மோடி திறந்து வைத்தார்.அதன் பின்னர் பேசிய மோடி, விழிஞ்ஞம் துறைமுகம் புதிய யுகத்தின் வளர்ச்சிக்கான அடையாளமாக இருக்கிறது என பாராட்டினார். கேரள அரசு மற்றும் அதானி துறைமுகங்கள் நிறுவனம் இணைந்து அமைத்துள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தை 40 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமை அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், மத்திய துறைமுகங்கள் அமைச்சர் சர்பானந்த சோனாவால், ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், மத்திய, மாநில அமைச்சர்கள், திருவனந்தபுரம் எம்பி ச சி தரூர், கவுதம் அதானி என பலர் பங்கேற்றனர்.