Also Watch
Read this
Posted on: May 25, 2025 11:09 AM
By: Srini Vasan

நியூயார்க்கில் உள்ள ஹட்சன் நதியில் நிறுத்தப்பட்டிருந்த கழிவுநீர் படகில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
வடக்கு நதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகே நியூயார்க் நகரத்திற்குச் சொந்தமான ஹன்ட்ஸ் பாயிண்ட் என்ற படகில் தொழிலாளர்கள் வெல்டிங் சம்பந்தமான வேலை செய்து கொண்டிருந்தபோது வெடிப்பு ஏற்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்தததாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved