வார விடுமுறை மற்றும் சபரிமலை சீசனை முன்னிட்டு குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குடும்பத்தினருடன் அருவியில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள், பின்னர் படகு சவாரி செய்து விடுமுறையை மகிழ்ச்சியாக செலவிட்டனர்.