சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முத்தாலம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு எட்டுப்பட்டி கிராம மக்கள் சேர்ந்து புலி வேட்டைக்கு செல்லும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. வலசைப்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில், சின்னக்கருப்பு, பெரியகருப்பு, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.