பணத்தை ஏமாற்றியவர் மீது புகார் அளித்தால், காவல்துறை தன்னையே மிரட்டுவதாக கூறி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி, கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. குறை தீர்வு கூட்டத்திற்கு சென்ற தேவசகாயம், தனது மச்சான் தன்னிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் இது தொடர்பாக அளித்த புகாரை போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.