இனத்தால்,மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று நினைக்கின்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு குளிர் ஜுரம் தான் வருமே தவிர வேறு எதுவும் கிடைக்காது என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக தாக்கி பேசினார். சென்னை புளியந்தோப்பு மன்னார்சாமி தெருவில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றவில்லை என்றால் முதல்வர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு, தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குபவர் முதலமைச்சர் என்றார்.