மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் இறைவனுக்கு சீராளன் பிள்ளைக்கறி அமுது படைக்கும் ஐதீக திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சீராளன் எழுந்தருளி வீதி உலா சென்ற நிலையில், திரளான பெண்கள் குழந்தைப்பேறு வேண்டி சாமி தரிசனம் செய்தனர்.