Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 01:42 PM
By: Manigandan Raja

புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி கோலாகலம் :
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய மகா நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி இன்று புனித நீர் எடுக்கும் நிகழ்வு கோலாகலமாகத் தொடங்கியது.
புனித நீரை யானையில் எடுத்தும், குதிரை, பசுக்கள் அணிவகுத்தும் புனித நீர் ஊர்வலம் ஸ்ரீராம சமுத்திரம் காவிரி ஆற்றிலிருந்து திரளான பக்தர்கள் புனித நீராடி, சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் புனித நீர் குடங்களை ஊர்வலமாக யானை, குதிரை மற்றும் காளைகள் ஆகிய மும்மூர்த்திகள் அணிவகுக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, ஏராளமான இளைஞர்கள் உற்சாக நடனமாடியும், புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது,
ஊர்வலத்தின் போது யானை மீது வைக்கப்பட்ட புனித நீர் கும்பத்திற்குப் பக்தர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர், கோவில் அருகேயுள்ள யாகசாலை பூஜைகள் நடைபெறும் இடத்திற்கு புனித நீர்
கலசங்கள் வைக்கப்பட்டு யாகசாலையில் முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, முதற்கால யாகவேள்வி பூஜைகள் பல்வேறு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved