திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மற்றொரு கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மா.பொ.சி நகர் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில், இரும்பு கழிவுகளுடன் லாரி ஒன்று சாலையோரம் நின்றுக் கொண்டிருந்தது. அப்போது கோயம்புத்தூரில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு, இரும்பு தயாரிப்பு பொருட்களை ஏற்றுக்கொண்டு வந்த லாரி, முன்னாள் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஓட்டுநர் ஸ்ரீராம் படுகாயமடைந்தார்.