நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை உச்சியில் உள்ள சரவண மலை பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். குன்னூர் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து தேர், காவடி, பால்குடம் சுமந்து மலை மேல் உள்ள சரவண மலைக்கு சென்று அலங்கரிக்கப்பட்ட முருகனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.