வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஒடுகத்தூரில் ஆற்று மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒடுகத்தூரில் உள்ள உத்திரகாவேரி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி செல்லப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த பின், மணல் கடத்தப்படுவதை உறுதி செய்த போலீசார், மணலுடன் இருந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியோடிய மணல் கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.