தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.