சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து குப்பை வண்டி மீது மோதியதில் ஊழியர் காயமடைந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பன்னபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காங்கியானூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடைய மனைவி சித்ரா. இவர் பன்னப்பட்டி பகுதியில் பணியில் இருந்த போது வேகமாக வந்த பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.