காஞ்சிபுரம் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து காஞ்சிபுரத்தை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியில் சென்றபோது பழுதானது. அதனை சரிசெய்ய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் எந்தவித நடவடிக்கையும் முன்எடுக்காததால் மணி கணக்கில் காத்திருந்த பயணிகள் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தனர்.