news-tamil-logo

3/22/2026, 12:00:46 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகைகளை மீட்கச்சென்ற பானிபூரி வியாபாரி
tv

Also Watch

tv

Read this

நகைகளை மீட்கச்சென்ற பானிபூரி வியாபாரி

திருப்பத்தூர்

Posted on: Mar 16, 2026 11:13 AM

17

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpt 2(2)

பானிபூரி வியாபாரி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1.50 லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பானிபூரி வியாபாரியிடம் சோதனை
இந்த நிலையில் பெருமைப்பட்டு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (45) இவர் திருச்சியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது நகைகளை திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் வைத்துள்ளார். அதனை மீட்பதற்காக திருச்சியில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பத்தூருக்கு வந்தார்.

ரூ.1.5 லட்சம், 21 கிராம் தங்கம் பறிமுதல்
அப்போது காரப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் இருந்த பறக்கும் படையினர் லட்சுமணன் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் 21 கிராம் தங்க நகையை எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்த அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியர் வரதராஜன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்பு அதிகாரிகள் அந்த பணத்தை கருவூலத்திலும் ஒப்படைத்தனர்.

Related Link
தவெகவில் ஒற்றுமை இல்லை

தவெகவில் ஒற்றுமை இல்லை

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
1 min agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved