Also Watch
Read this
Posted on: Apr 20, 2025 02:56 AM
By: Srini Vasan

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பரப்பள்ளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கு மட்டும் அதிகாரிகள் பட்டா வழங்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த கிராம மக்கள், சம்பவ இடத்துக்கு மண்ணெண்ணைய் கேனுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved