Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 10:13 AM
புதுச்சேரியில் தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ. குப்புசாமி தலைமையிலான நேயம் மக்கள் கழகத்திற்கு, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தவெக உடன் கூட்டணி
இதுகுறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் நேரு என்ற குப்புசாமி எம்எல்ஏ, தவெக உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளார்.
30 தொகுதிகளில்...
இதன் அடிப்படையில், தவெக சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை வெற்றித் தலைவர் ஒப்புதலோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved