நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.