கல்லூரி கனவுத் திட்டம், அந்த திட்டம், இந்த திட்டம் எனக் கூறி பள்ளி விடுமுறையிலும் உயிரை எடுப்பதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், சக ஆசிரியரிடம் புலம்பும் ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், ஒரு சமூகத்தை சார்ந்த மக்கள் குறித்து இழிவாக பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.