விருதுநகர் மாவட்டம், பெரிய சோழாண்டி கிராமத்தில் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியின் கட்டடம் சேதமடைந்துள்ளதால் நியாய விலைக்கடைக்குள் வைத்து பாடம் கற்பிக்கும் அவல நிலை நீடிப்பதாகவும் மக்கள் வேதனையை பகிர்ந்து கொண்டனர்