மதுரை அருகே டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வாழை மற்றும் நெற்பயிர்களை கைகளில் ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்