Also Watch
Read this
By: Manigandan Raja

முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை :
தமிழ்நாட்டின் முதல்வர் 2026 தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போதைய தள்ளுபடி குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரே உள்ள சென்னை சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அரசின் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து முழுமையான கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved