தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் விபத்து ஏற்படுவதாக, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள், சாலைகளை தோண்டி குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், அந்த பள்ளத்தை சரியாக மூடாததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுவதாகவும் முறையிட்டனர்.