பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வு நடத்துவது கண்டிக்க தக்கது என்றும், அதனை மாற்றி வேறு ஒரு நாட்களில் தேர்வை நடத்த வேண்டும் எனவும், திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சி.ஏ தேர்வினை பொங்கல் திருநாளில் நடத்துவது என்பது, தமிழக மக்களின் உணர்வுகளோடு மத்திய பாஜக அரசு விளையாடுவது போன்றது என குற்றம்சாட்டினார்.