தேனி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கணவரை தாக்கிய அவருடைய சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியகுளம் பகுதியை சேர்ந்த சகோதர ர்களான பாபு மற்றும் பிரபு இடையே பூர்வீக வீடு தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பிரபு வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இதனை தட்டிக்கேட்ட பாபு மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாபுவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.