பரணி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு புதுக்கோட்டை வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாதர் சாமி ஆலயத்தில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.