ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காக்கூர் கிராமத்தை சேர்ந்த நபரின் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம உதவியாளர் இராசையா 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலினுக்கும் சேர்ந்து 5 ஆயிரம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை கொடுத்த போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.