நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 105 வயது மூதாட்டிக்கு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர். 100 வயதை தாண்டி வாழ்ந்து வரும் மெய்யாத்தாள் சீனி பாட்டிக்கு, நாடுகாணி கிராம மக்கள் மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.