கடந்த 7 ஆண்டுகளாக அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் குடியேறி வேலைப்பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், போலீசார் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது ஆவணங்கள் முரணாக இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்யப்பட்டனர்.