ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில், பெற்றோர் கண்முன்னே எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்த கார்த்திக், வேலூரில் நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்துடன் பங்கேற்று விட்டு, உறவினர்களுடன் ஆட்டோவில் வீடு திரும்பினார். அப்போது விபத்தில் சிக்கி அவரது மகள் உயிரிழந்தார்.