திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். தைப் பொங்கலை முன்னிட்டு, தனது உறவினர்கள் 25 பேருடன் கோவிலுக்கு வந்த ரோஜா, சிறப்பு வழியில் சென்று மூலவரை வழிபட்ட பிறகு வள்ளி, தெய்வானையுடன் இருந்த உற்சவர் முருகப் பெருமானையும் தரிசனம் செய்தார். பிறகு, பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.