Also Watch
Read this
By: Manigandan Raja

சாலையின் நடுவே விழுந்த மரம் :
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த மழையின் காரணமாக, குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான மாற்று வழிப்பாதையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கனமழை காரணமாக, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லக்கூடிய மாற்று வழிப் பாதையான வண்டிச் சோலையில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில், ராட்சத மரம்
ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. முக்கியமான மாற்றுப் பாதையில் மரம் விழுந்ததால்.
அப்பகுதியில் உடனடியாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தின் பாகங்கள் முழுமையாக அகற்றப்பட்டு, போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved