செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி டியூஷனுக்கு சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவன் பாலியல் தொந்தரவு அளித்தான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் கார்த்திகேயன் என்பவன் கைது செய்யப்பட்டான்.