திருச்சி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மாயமான மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்களில் 10 பேர் ஆற்றில் குளிக்க சென்றபோது, ஜாகிர் உசேன், சிம்பு, விக்னேஷ் ஆகிய மூவரும் நீரில் மாயமாகினர்.