கோவை மாவட்டம் க.க.சாவடியில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை தொடர்பாக புதிய தகவல்கள்.கேரள மாநிலம் திருச்சூரில் நகைக்கடை நடத்தி வருகிறார் ஜெய்சன்.ஜெய்சன் தனது ஊழியர் விஷ்ணுவுடன் இணைந்து சென்னை வந்து தங்கக்கட்டிகளை வாங்கியுள்ளார்.நகை செய்வதற்காக சென்னை வந்து 1.25 கிலோ தங்கத்தை வாங்கியுள்ளார் ஜெய்சன்.தங்கத்தை வாங்கி விட்டு கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் திருச்சூர் புறப்பட்ட ஜெய்சன்.கோவை மாவட்டம் க.க.சாவடி சென்ற போது காரின் குறுக்கே நிறுத்தப்பட்ட லாரி.லாரியில் இருந்து 5 பேர் மங்கி குல்லா அணிந்து கொண்டு காரை நோக்கி சென்றதாக தகவல்.காரின் கண்ணாடியை உடைத்து காரின் உள்ளே கொள்ளைகாரர்கள் புகுந்ததாக தகவல்.கார் ஓட்டுநரை அடித்து உடைத்து காரின் பின்பகுதிக்கு தள்ளிய கொள்ளையர்கள்.காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல்.கொள்ளையர்கள் 5 பேரும் மலையாளத்தில் பேசியதாக தங்கத்தை பறிகொடுத்தவர்கள் தகவல்.