தூத்துக்குடியில் தொடர் கன மழை காரணமாக கோரம்பள்ளம் காலான்கரை அத்திமரப்பட்டி விவசாய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தாவிட்டால், நெற்பயிர்களும், வாழைகளும் அழுக தொடங்கிவிடும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.