நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் புதுமையான கதை களத்துடன் படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் கூட்டணிக்கேற்ப ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் எடுக்கப்பட உள்ளதாகவும், படத்தின் கதை பிடித்துப் போனதால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கலாம் என சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.