Also Watch
Read this
By: Web Team

தன்னிடம் ஒரு நடிகர் மோசமாக நடந்து கொண்டதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தென்னிந்திய சினிமாவில் தான் நடிக்க தொடங்கியபோது, ஒரு படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் எல்லை மீறி நடக்க தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்று நடந்து கொண்டால் இனி நடிக்கமாட்டேன் என சொன்னபின் அந்த நடிகர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், இப்படி கசப்பான சம்பவங்களும் தன் பயணத்தில் உண்டு என்றும் நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved