உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை : ஈரானில் கருப்பு மழை, அமில மழை பெய்வதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் கரும்புகை வான் வரை பரவி உள்ளது. இதனால்.அந்நாட்டில் கருப்பு மழையும், அமில மழையும் பெய்வதால், சுவாசக் கோளாறு, தலைவலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்பதால், பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. மேலும், தெஹ்ரானில் உள்ள ஒரு அலுவலக வாயிலில் கருமை நிறத்தில் இருந்த திரவத்தை தூய்மை பணியாளர் சுத்தம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. Related Link "ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது"