பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில், அந்நாட்டு முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜான் டிராமணி மகாமா சிறப்பான முறையில் வரவேற்க, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. கானா அதிபருடன் உயர்மட்ட பிரதிகள் அளவிலான ஆலோசனையில் பிரதமர் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் இந்தியா கானா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பேசிய பிரதமர் மோடி, வரும் காலங்களில் இருநாடுகளிடையே வர்த்தகத்தை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்தார்.