Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 03:45 PM
By: Manigandan Raja

வழிமறித்த போதை இளைஞர்கள் :
மதுரையில் நேற்று முன்தினம் ஆரப்பாளையம் - விரகனூர் சுற்றுச்சாலை செல்லும் அரசு பேருந்து அதிகாலை 5.30 மணி அளவில் திருமலை நாயக்கர் மஹால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த 3 போதை இளைஞர்கள்.
அரசு பேருந்தை வழிமறித்து தகாத வேறு வார்த்தைகளால் பேசி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இடையே தகராறு செய்துள்ளனர். அப்போது போதையில் இருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் தனது கால் சட்டையை கழட்டி பிறப்புறுப்பை காட்டி அசிங்கமான முறையில் நடந்துள்ளார்.
இந்த சம்பவம் பேருந்தில் பயணித்திருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் பேருந்தில் இருந்த பெண்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர் இளைஞர்களை போலீசார் உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்.
அந்த வீடியோ காட்சி வாகன நம்பர் அடிப்படையில் இளைஞர்களை காவல்துறையினர் தேடி வந்தனர், தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சுப்புராயர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த குமார் (24) , பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த அபிஷேக்(25) ஆகிய இருவர் மீதும் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் வீடியோவில் உள்ள மற்றொரு இளைஞரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் பொது இடங்களில் தொடர்ந்து அட்ராசிட்டி செய்து வருகின்றனர் அவர்களை கண்டடைந்து காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved