ரஷ்யாவில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு ரயில் பாலங்கள் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பிரையன்ஸ்க் பகுதியில் சனிக்கிழமை பிற்பகுதியில் பாலம் இடிந்து விழுந்து பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சில மணிநேரங்களிலேயே, கர்ஸ்க் பகுதியில் ஒரே இரவில் பாலம் இடிந்து ரயில் தடம் புரண்டது. ஜெலெஸ்னோகோர்ஸ்க் மாவட்டத்தில் ஒரு சரக்கு ரயில் என்ஜின் சென்று கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.