சரணாகதிதான் ஈரானுக்கு ஒரே வழி :நிபந்தனையற்ற சரணாகதி அடைவதைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் ஈரானுடன் எட்டப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். சரணடைந்தப் பிறகு, ஈரானுக்கு ஒரு சிறந்த தலைவரை தேர்வு செய்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அந்நாட்டை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம் என தெரிவித்த டிரம்ப், ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பணியாற்றுவோம் என கூறினார்.மொஜ்தபா கமேனியை ஏற்றுக்கொள்ள முடியாது :ஈரான் அரசின் உயர் பொறுப்புக்கு அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபாவை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில்.ஈரானுக்கு அமைதியை கொண்டு வரக்கூடியவர் தான் தேவை என்றதோடு, வெனிசுலாவுக்கு புதிய அதிபரை கொண்டுவந்தது போல், நியமன வேலைக்கு தாமே இறங்க வேண்டி இருக்கும் என கூறினார்.ஈரான் போர் முடிந்த பின் கியூபா மீது கவனம் செலுத்தப்படும் :ஈரான் போரை முழுமையாக முடித்த பின், கியூபா மீது கவனம் செலுத்தப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிபர் டிரம்பிடம் ஈரான் போர் மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், ''போரில் அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் வேகமாக முன்னேறி வருவதாக கூறினார். Related Link அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்த மெஸ்ஸி