பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்திய நேரப்படி இரவு 8.23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 31.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.04 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த எந்த விவரங்களும் அதிகாலை வரை வெளியாகவில்லை.